ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் தெலுங்கில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று முன்தினம், அவர் இன்ஸ்டாகிராமில் தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். குழந்தைக்கு 10 மாதம் ஆகும் நிலையில், இப்போது தான், அவர் இந்த செய்தியை வெளியுலகிற்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து பேட்டியளித்த ஸ்ரேயா, ”என் குழந்தைக்கு 10 மாதமாகிறது. நான் அவளை இனி மறைக்க முடியாது என்று நினைக்கிறேன். அவள் ஏற்கனவே நன்கு பயணித்த குழந்தை, உலகம் முழுவதும் சில பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறாள். ஒரு குழந்தை, தாயைப் பெற்றெடுத்தைப் போல நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ராதா எனது பெஸ்ட் ப்ரெண்ட்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதோடு தனது குழந்தைக்கு ராதா எனப் பெயர் வைத்திருப்பதையும், அதை அவரது கணவர் மிகவும் விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.