தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமல்ல என்று கூறியுள்ள கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தன்னைப் போலவே ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் யாராவது இருக்கிறீர்களா? அப்படி முழு எபிசோசடையும் பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய ஆறுதல் அரவணைப்பு' என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த டுவீட்டில் ஸ்டார் விஜய், கம்பெனி ஆர்டிஸ்ட், 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கம்பெனி ஆர்டிஸ்டுகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனவும் கிண்டலடித்துள்ளார். இதற்கு சில ரசிகர்கள் 'அப்புறம் எதுக்கு மேடம் நீங்க பிக்பாஸ் போனீங்க' என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனக்கு பேசியபடி தொகையை கொடுக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.