கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

தீபாவளி தினத்தன்று 'அண்ணாத்த, மாநாடு, எனிமி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்தப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகியது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட விரும்பி 'மாநாடு' பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துவிட்டார். அதனால், தற்போது 'அண்ணாத்த, எனிமி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளன.
ஒரே சமயத்தில் 'அண்ணாத்த' படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். 'மாநாடு' படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
'அண்ணாத்த' படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது 'எனிமி' படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'மாநாடு' போட்டியிலிருந்து விலகியதால் அது 'எனிமி' படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், 'எனிமி' படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
'அண்ணாத்த, எனிமி' இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.