இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கீர்த்தி சுரேஷை போலவே, காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் மலையாள திரையுலகில் நடித்து வருகிறார்.. மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் ஜி.வி.பிரகாஷின் 4ஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார். இந்நிலயில் நடுரோட்டில் மக்கள் சூழ்ந்துள்ள இடத்தில் காயத்ரி சுரேஷ் சிலரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பது குறித்து காயத்ரி சுரேஷ் விளக்கம் கூறியுள்ள இன்னொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதன் சாராம்சம் இதுதான்..
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது தோழிகள் வீட்டுக்கு சென்றுள்ள காயத்ரி சுரேஷ், அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். பின்னர் காரில் வேறு ஒரு இடத்துக்கு செல்லும்போது காரை காயத்ரி சுரேஷின் தோழி ஓட்டியுள்ளார். அப்போது ஒரு காரை ஓவர்டேக் செய்தபோது எதிரே வந்த கார்மீது எதிர்பாராத விதமாக இவர்கள் கார் மோதியது. ஆனால் பயத்தில் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
ஆனால் அந்த காரில் வந்தவர்கள் இவர்களை விரட்டி வந்து ஓரிடத்தில் மடக்கி விட்டனர். இவர்களை காரில் இருந்து இறங்க சொல்லி சத்தம் போட, அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட்டது. காரை நிறுத்தாமல் வந்தது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாக காயத்ரி சுரேஷ் கூறியும் கூட அவர்கள் விடாமல், போலீசை வரவழைத்துள்ளனர்.
நல்லவேளையாக போலீஸார் இவர்களுக்கு ஆறுதலாக பேசியதோடு எதிர் தரப்பையும் சமாதானப்படுத்தி பிரச்சனையை தீர்த்து அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கே கூடியிருந்தவர்கள் இந்த நிகழ்வுகளை படம் பிடித்து சோஷியல் மீடியாவில் வெளியிட, நடிகை காயத்ரி சுரேஷ் குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என்பது போன்ற மோசமான கமென்ட்டுகள் தான் அதிகம் வந்தனவாம்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடந்தது இதுதான் என கூறி வீடியோ வெளியிட்டுள்ள காயத்ரி சுரேஷ், ஒரு நடிகை என பார்க்க வேண்டாம்.. அட்லீஸ்ட் ஒரு பெண் என நினைத்தாவது உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகளை வெளியிடுவதை தவிர்த்திருக்கலாமே என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.