தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலா ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழ் தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்ட சமந்தா தற்போது தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, மன அழுத்தம் தொடர்ந்தால் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.