பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்தார். இந்த பிரிவுக்கான காரணம் குறித்து பலவாறான தகவல்கள் வெளியானது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார், அதனை அவரது கணவர் குடும்பம் தடுத்தது என்றும், சமந்தாவுக்கும் ஒரு காஸ்ட்யூம் டிசைனருக்கும் இருந்த நெருக்கம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த சமந்தா தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனாலும் பல தெலுங்கு யு டியூப் சேனல்ககளில் சமந்தா பிரிவுக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும், அவருக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.