தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பான்டே. 'ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பதி பத்னி அவுர் ஓ, காலி பீலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் 'லிகர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் அனன்யா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனால், செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றார்.
இதனிடையே, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் அனன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கக்ளாம். ஆனால், போதைப் பொருள் சோதனையை அடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து அனன்யா பான்டே சமீபத்தி பேட்டி ஒன்றில், “என்னை முதலில் அந்தப் படத்திற்காக யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. அப்புறம் என்னை எப்படி அந்தப் படத்திலிருந்து நீக்க முடியும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.