இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஓடிடியில் இந்த ஆண்டு தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சிறியவர்களையும் அதிகம் கவர்ந்தது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஜுலை மாதம் வெளியாகி அதுவும் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றது.
கடந்த வாரம் ஆர்யா நடித்து தியேட்டர்களில் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்த வருடம் ஆர்யா நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே அவருடைய மார்க்கெட் உயரக் காரணமாக அமைந்துவிட்டது.
தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இயக்குனர் சக்தி சவுந்திரராசன் கூறுகையில், ‛‛இப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும். தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதையாக இப்படம் இருக்கும். திரையுலகின் அரிதான முத்து ஆர்யா. இப்படம் ஆர்யாவுக்கு சிறப்பான படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.