தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |