இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மதியம் முதலே சமூக வலைத்தளங்களில் புனித் பற்றிய பதிவுகள் மிக அதிகமாக இடம் பெற்று வருகிறது.
அவரது படங்களைப் பார்க்காதவர்களும், அவரைப் பற்றித் தெரியாதவர்களும் கூட அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் செய்த பல சமூக சேவைகளும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. அனாதை இல்லம், முதியோர் இல்லம், கால்நடை பராமரிப்பு இல்லாம், ஏழை மக்களுக்கான படிப்பு வசதி என பலவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.
பொது நிகழ்வாக தனது அண்ணனின் திரைப்பட விழாவில் கடைசியாகக் கலந்து கொண்டார் புனித் ராஜ்குமார். மேலும் நேற்று காலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதுதான் அவர் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படமாக அமைந்துவிட்டது.
இந்தியத் திரையுலகத்தினர் பலரும் புனித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். சிலர் நேரில் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.