‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா |
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்சைடர் பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர். எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தை டாப்சியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.