ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிரவீன் இயக்கி நடிக்கும், ‛போத்தனுார் தபால் நிலையம்' படம் மூன்று பாகமாக வெளியாகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. முதல் பாகம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மற்ற இரண்டு பாகமும் ஒரே கட்டமாக அடுத்தாண்டு ஜனவரி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
இயக்குனர் பிரவீன் அளித்த பேட்டி: தபால் நிலையத்தில் நடக்கும் த்ரில்லிங்கான கதை. 3 பாகமாக எடுத்துள்ளோம். ஒன்று முடிந்து விட்டது. விரைவில் வெளியாகிறது. நானே இயக்கி நடித்துள்ளேன். முதல் பாகத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் புதியவர்களே நடித்துள்ளனர். கதைக்கு தேவைப்பட்டதாலேயே மூன்று பாகமாக வெளியிடுகிறோம். அது படம் பார்க்கும் போது புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.