ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாலிவுட் சினிமா மறுபடியும் தியேட்டர்களில் தங்களது வெளியீட்டை துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் பெரிய படமாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமவுலி.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜமவுலி கூறும்போது, சூர்யவன்ஷி படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த அசாதாரண சூழலில் கிட்டத்தட்ட ஒரு வருடம் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து தியேட்டர்கள் திறந்த பின்பே ரிலீஸ் செய்துள்ள தயாரிப்பாளரின் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோஹித் ஷெட்டி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.