சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியாமணி, 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்துவரும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாவும், அவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்ததாகவும், அவரை விவாகரத்து செய்யாமலேயே பிரியாமணியை திருமணம் செய்துக் கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால் இதை மறுத்து வந்தார் பிரியாமணியின் கணவர் முஸ்தபா. இருந்தப்போதிலும் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கு கருத்து வேறுபாடு எழுந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்த பிரியாமணி, தற்போது கணவருடன் தீபாவளி கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.