ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள சின்னத்திரை உலகின் முன்னணி நடிகை சந்திரா லட்சுமணன். தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி, ரஞ்சித் நடித்த அதிகாரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு குறைந்ததும் சீரியல் பக்கம் சென்றவர் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் அவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் தொடர்களில் நடித்துள்ளார்.
38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலை சந்திரா ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கேரளாவில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். சந்திரா, டோஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.