தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது தமிழில் ஹாய் சினாமிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனவும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛விஜய்யின் நடனம் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் விஜய்யின் ரசிகன். இதற்கு காரணம் அவரது நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடி இருப்பார். அது அத்தனை எளிதான விசயமல்ல. என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.