திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்த படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கமல் தனது சொந்த தயாரிப்பில் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
விஸ்வரூபம் படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன் மலையாளத்தில் டேக் ஆப், சீ யூ சூன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழில் அவர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு கமல் தான் கதையை உருவாக்கி வருகிறாராம். இந்த படத்தில் விக்ரம் விஜய்சேதுபதி இருவரையும் நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் கமல்.
இந்த படத்தில் கமல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலும் விக்ரம், விஜய்சேதுபதி கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை உருவாகி வருகிறதாம். தற்போது தன்னுடன் விக்ரம் படத்தில் இணைந்து விஜய்சேதுபதி நடித்து வருவதாலும், ஏற்கனவே தனது தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பதாலும் இவர்கள் இருவரையும் கமல் எளிதாக கூட்டணி சேர்த்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.