வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
வீர தீர சூரன் படத்துக்குபின் விக்ரம் யார் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த பட தயாரிப்பாளர் யார் என்று தெரியாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வந்தார்கள். மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கலாம் என்று ஒரு பேச்சு வந்தது. அதேப்போல் 96 , மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார். தயாரிப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. பிரதீப் ரங்கநாதன் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இப்போது அது எதுவும் நடக்கவில்லை. புது கூட்டணி உருவாகிவிட்டது.
ஆம், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோ, பிரேம் குமார் இயக்கப் போகிறார் என்று நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிவிட்டது. தங்கலான், வீர தீர சூரன் ஓகே என்றாலும் பெரிய ஹிட்டாகவில்லை. அதனால், விக்ரம் ஒரு பெரிய வெற்றிக்காக பிரேம் குமாரை தேர்ந்தெடுத்தார் என தகவல். வேல்ஸ் நிறுவனம் 10 பெரிய படங்களை தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த பட்டியலில் விக்ரம் படமும் சேர்ந்துள்ளது.