வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‛96' என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார், அதன்பிறகு அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் பிரேம் குமார். ஆனால் சமீபத்தில், 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கப் போவதாக ஒரு புதிய செய்தி பரவி வந்தது.
இதுகுறித்து பிரேம்குமார் தரப்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது அவர் ஒரு திரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகிறார். அது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மற்றபடி, 96 படத்தின் அடுத்த பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.




