சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
‛விக்ரம்' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‛இந்தியன்-2, தக்லைப்' என்ற இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருந்த தனது 237வது படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் அது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதாவது, தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.