'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இருவரும் சென்னையிலுள்ள பனையூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகியோர் மூலம் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் சினேகா. இது காரணமாக மாதந்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வார்த்தையை நம்பி ஆன்லைன் மூலமாக ரூ. 25 லட்சம் ரூபாயும், ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கிறார் சினேகா.
ஆனால் முதலீடு செய்த மே மாதத்தில் இருந்து இப்போது வரை மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.