நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
முன்னணி நடிகைகளாக கோலோச்சியவர்கள் ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் லெவலுக்கு இறங்கி வருவதை பார்த்துள்ளோம். அதேசமயம் பீக்கில் இருந்தாலும் கூட நட்புக்காக இன்னொருவரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது லிஸ்ட்டில் தான் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதித்து விட்டார் என்பதும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த செய்தி தான். இந்தப்பாடலை ஐதராபாத் நகரிலேயே பிரமாண்ட செட் அமைத்து படமாக்குவதற்கு தீர்மானித்து இருந்தார்களாம்..
ஆனால் சமந்தாவோ நகரை விட்டு சற்றே தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்பாடலின் படப்பிடிப்பை நடத்துமாறு இயக்குனர் சுகுமாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிவதாக அறிவித்த சமந்தா, நகரின் அருகில் படப்பிடிப்பு நடந்தால் மீடியாக்களை சந்திக்க வேண்டி வருமே என்பதால் அதை தவிர்ப்பதற்காக இந்த இடமாற்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.