சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். கதைப்படி விஜய் எல்லோரிடமும் அதீத அன்பு வைத்து விடுவாராம். இதனால் எழுகின்ற சிக்கல்கள் தான் கதை என்கிறார்கள். இதுவரை அதிகம் பேசாமல் அமைதியான கேரக்டர்களிலேயே நடித்து வந்த விஜய் இந்த படத்தில் கலகலவென பேசும் கேரக்டரில் நடிக்கிறாராம். விஜய் ஆரம்பகால படங்களில் கலகலப்பான கேரக்டர்களில் தான் நடித்து வந்தார்.