தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'.
இப்படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு ஒரு வாரம் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கான முன்பதிவை ரோகிணி, ஜிகே சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் ஆரம்பித்தன. அந்த காட்சிகளுக்கான முன்பதிவு மொத்தமாக முடிந்துவிட்டது. மற்ற தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அடுத்து 8 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிம்பு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்போது 'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவுக்கு ஆதரவு இருக்கிறது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.