தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில், தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . கீர்த்தியின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார்
படத்தின் துவக்க விழா பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்ட படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. தந்தை தானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதுவும் அப்படி சாதரணமாக கிடைத்து விடாது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது” என கூறியுள்ளார்.