இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தநிலையில் ‛சித்திரை செவ்வானம்' என்கிற படம் மூலம் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல்
ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண்ட் சில்வா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஆகியோருடன் ரீமா கல்லிங்கலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி கூறும்போது, “இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு குத்துகளை விட்டு, பதிலுக்கு நாலு உதைகளை வாங்க வேண்டி இருக்குமோ என நினைத்தேன்.. ஆனால் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதை உருவாக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.