கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் பரத் நடித்த யுவன் யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபுவை திருமணம் செய்துகொண்ட பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தநிலையில் ‛சித்திரை செவ்வானம்' என்கிற படம் மூலம் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல்
ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண்ட் சில்வா முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஆகியோருடன் ரீமா கல்லிங்கலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் நடித்தது பற்றி கூறும்போது, “இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். ஸ்டண்ட் இயக்குனர் இயக்கும் படம் என்பதால் நாலு குத்துகளை விட்டு, பதிலுக்கு நாலு உதைகளை வாங்க வேண்டி இருக்குமோ என நினைத்தேன்.. ஆனால் முற்றிலும் மாறுபட்ட மென்மையான படமாக இதை உருவாக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.