ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் வசித்து வந்தாலும் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். சென்னையில் தான் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். அதன் பிறகே சினிமாவில் அறிமுகமானார்.
தனது கல்லூரித் தோழிகளுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் கீர்த்தி. அவரது தோழி ஒருவருக்கு நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது கல்லூரித் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தாலும் தனது கல்லூரித் தோழிகளை மறக்காமல் அவர்களது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்று.
“திருமண ஓசைகள், சிரிப்பின் ஒலிகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தை விட நண்பர்களுடன் சேர வேறு சிறந்த சந்தர்ப்பம் இல்லை,” என தனது தோழியர்களுடனான சந்திப்புப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.