மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியான த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தையும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் எடுத்து, அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம்-3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. பின்னர் ஒருகட்டத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது நிலைமை வேறு. இரண்டாம் பாகத்தின் வெற்றியால், இதன் மூன்றாம் பாகத்தை எப்போது துவங்க போகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.
சொல்லப்போனால் மூன்றாம் பாகத்திற்கான க்ளைமாக்ஸ் கூட நான் யோசித்து வைத்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொல்ல அவருக்கும் அது பிடித்துப்போய் விட்டது. ஆனால் க்ளைமாக்ஸ் வரை சரியான பாதையில் கதையை நகர்த்திக் கொண்டு வர காட்சிகள் வேண்டும் இல்லையா..? அதில் தான் சவால் இருக்கிறது. தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் இருக்கிறேன்..
அதேசமயம் மனதிற்கு திருப்தியான ஸ்கிரிப்ட் தயாரானால் தான் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மூன்றாம் பாகத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். பேசாமல் அந்த திட்டத்தை அப்படியே போட்டுவிடுவேன்.. அதனால் இப்போதைக்கு சொல்வதென்றால் த்ரிஷ்யம் 3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது” என கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.