தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தென் இந்திய மொழிகளிலேயே பிரபலமாகி விட்டார். தெலுங்கிலும் இந்த படம் ஹிட் அடித்தது. கடந்த சில மாதங்களாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் மூலம் அனுதீப் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரித்து வர்மா கடைசியாக தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அடுத்து தீனி என்ற படத்தில் அசோக் செலவனுடன் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.