ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… |
நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் ஆந்திராவிலுள்ள ஏலூரு என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். இன்று அவரின் 61வது பிறந்தநாளாகும்.
உறவினர் வீட்டு வேலைக்காரியாக தனது சென்னை வாழ்க்கையை தொடங்கி, சினிமாவுக்குள் நுழைந்து பல கோடி நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா. ஏழ்மையின் காரணத்தால் இவருடைய பள்ளிக் கல்வி நான்காம் வகுப்போடு நின்று விட, குடும்பத்தினர் இவருக்கு சிறுவயதிலேயே திருமணமும் முடித்து வைத்தனர். திருமண வாழ்க்கையும் இவருக்கு பெரிதாக மகிழ்ச்சியை தரவில்லை. வேலை தேடி சென்னைக்கு வந்த இவர் திரைப்படத் துறையில் ஒப்பனையாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார்.
மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தியின் உதவியால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "வண்டிச்சக்கரம்" என்ற திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே இவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்று தந்தது. அதிலிருந்து விஜயலட்சுமி என்ற இவரது இயற்பெயர் சில்க் ஸ்மிதா என மாறியது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும்; கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே அமைந்தது. இவருடைய கவர்ச்சியான தோற்றம், நடன அசைவு, கிரங்க வைக்கும் கண்கள் தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் கனவுக்கன்னியாக வலம் வரச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 450க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் நிறைய துன்பங்களும், ஏமாற்றமும் மட்டுமே அதிகம் இருந்தது. 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து போனார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் திரை வாழ்க்கையை சினிமாவாக எடுத்து பலர் கல்லாக்கட்டினர். அவர் மறைந்து இப்போது வரை 25 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் அவருக்கான இடம் மட்டும் சினிமாவில் இப்போதும் வெற்றிடம் தான்.