திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதிபுருஷ் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்தபடியாக மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க, அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை டிசம்பர் 5-ந்தேதி முதல் ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்குகிறது. இதில், பிரபாஸ் - தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். தற்காலிகமாக புராஜக்ட் கே என்று பெயர் வைத்துள்ள இப்படம் சயின்ஸ் திரில்லர் கதையில் உருவாகிறது.