இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் 'டம்மி டப்பாசு' படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் வெளிவந்த 'ஜோக்கர்' படம் அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. அதற்கு பின் அவருடைய புடவை அணிந்த கவர்ச்சியான போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்து டிவியில் அவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2' ஆகியவை அவருக்கு மக்களிடம் நல்ல பிரபலத்தைத் தந்தது.
அவர் கடைசியாக தமிழில் நடித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து மலையாளப் படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார் ரம்யா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, “எனது அடுத்த புரொஜக்ட் மலையாளத்தில் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக பெயர் பெற்ற, அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி சாருடன் நடிப்பதன் மூலம் கனவு நனவாகிறது. தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி,” என மலையாளப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரம்யா.