தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சிம்பு திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று(டிச., 11) அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தது. தொடர்ந்து ஓரிரு நாள் மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அவரது ரசிகர்கள், சீக்கிரம் அவர் குணமாகி வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.