இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரைத் துறையில் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பயணித்து வந்த நடிகை நயன்தாரா, தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட துவங்கி உள்ளார். இதற்காக அவர், 'தி லிப் பாம்' நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இது குறித்து, நயன்தாரா தரப்பு அறிக்கை: தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, அழகு சாதன பொருட்கள் உலகில், புதிய பிராண்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, புதிய அத்தியாயத்தை நயன்தாரா துவக்கி உள்ளார். தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களின், சிறப்பான செயல்திறன், உயர்பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், இந்நிறுவனத்துடன் அவர் கைகோர்த்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், கீர்த்தி சுரேஷ் இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும்; சமந்தா, காஜல் உள்ளிட்டோர் ஓட்டல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார்.