ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 33 வருடங்களில் வெளியாகியுள்ளன. ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப்பின் இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இதன் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் மது தான் இந்த 5ம் பாகத்தையும் இயக்குகிறார்.. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
பொதுவாகவே தொடர் பாகங்களாக எடுக்கப்படும் படங்களில் அதில் நடித்த முக்கிய நடிகர்கள் தொடர்ந்து இடம் பெறுவது உண்டு, அப்படி இந்த நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் நடிகர்கள் முகேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். முகேஷ் இந்த ஐந்தாம் பாகத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில் ஜெகதிஸ்ரீகுமார் இதில் நடிப்பாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.
காரணம் கடந்த 2012ல் கார் விபத்தில் சிக்கிய ஜெகதிஸ்ரீகுமார் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி குணமடைந்தாலும் அதன்பின் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.. இந்தநிலையில் இந்த ஐந்தாம் பாகத்தில் அவரும் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, அவரது வசதிக்காக பல காட்சிகளை அவரது வீட்டிலேயே படமாக்க முடிவு செய்துள்ளார்களாம்.