சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏ.,வான ரோஜா நேற்று ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் சுமார் 70 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை பெங்களுருவை நோக்கித் திருப்பி பெங்களூரில் தரையிறக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் பயணித்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென மேகமூட்டம் இருப்பதாக சொன்னார்கள். போதிய பெட்ரோல் இல்லை என்றார்கள், பின்னர் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மாறி மாறி அறிவித்தார்கள்.
பெங்களூரு விமான நிலையத்தில் நாங்கள் சுமார் 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்கிறோம். எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுத்தார்கள். சமீபத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி அதிகமாக உள்ளதாகக் கூறி வெளியே செல்ல அனுமதி கேட்டும் மறுத்தனர். மேலும், விமானத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.