ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'ஆர் 23 ; கிரிமினல்'ஸ் டைரி'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகிறது. குறும்பட நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன், ஜெகா, ராகேஷ் சேது ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
பெரும் விபத்தை சந்தித்து மறுவாழ்வு பெற்றுள்ள யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா கூறியதாவது: இந்தப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும் கூட இதுவரை வந்திராத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படம் பார்க்கிறவவர்கள். ஒரு நிமிடத்த தவற விட்டாலும் அவர்களுக்கு படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாம பார்த்தால் தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னன்னு புரியும். இந்த படம் யாஷிகாவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்கிறார்.