இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் நடிகர் ஆரி. தற்போது ‛‛அலேகா, பகவான், நெஞ்சுக்கு நீதி'' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்து "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிறது. இப்படத்தில் ஆரியுடன் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை பற்றிய விவரம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். எஸ்.ஏ.எஸ் புரொடக்ஷன் சார்பில் யோகராஜ் தயாரிக்கிறார். நேற்று படத்திற்கான பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.