சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டிக்கிலோனா படத்தை அடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார் சந்தானம். அந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்புக்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சந்தானம்.