தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தற்போது ருத்ரன், யானை, பத்து தல , திருச்சிற்றம்பலம், இந்தியன்-2 என் பத்து படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். இதில் சர்ஜுன் என்பவரது இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பிளாட் மணி. இந்த படம் குவைத் நாட்டில் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படும் இரண்டு தமிழர்களை ஒரு செய்தி நிறுவனம் எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ஜீ 5 என்ற இணையதளத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் கதையாக சொல்லி இருக்கும் விதம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று கூறினார்.