தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையம் கானா பாடகர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார். இதனால் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் சில கானா பாடகர்களின் வரம்புகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் ஒரு பாடல் மனதை வலிக்க செய்கிறது. பெரம்பூரை சேர்ந்த சரவணன் (சரவெடி சரண்) என்பவர் மேடையில் ஒரு கானா பாடலை பாடுகிறார். அந்த பாடல் வரிகள் சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம். அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்கிற பொருள் தருகிற மாதிரியான பாடல் வரிகளை பாடி உள்ளார்.
இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் புகார்கள் வரவே திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் பாடகர் சரவணனை கைது செய்துள்ளனர்.
பின்னர் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அளித்த சரண், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் பாடிய பாடலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சரண், பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.