பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக பாதை மாறியவர் எஸ்ஜே சூர்யா. எப்படியோ தனது இலக்கான நடிப்புலகிற்கு மீண்டும் திரும்பிய எஸ்ஜே சூர்யா தனது எண்ணப்படியே இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். ஸ்பைடர், மாநாடு படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
இதில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் அவரது வில்லன் நடிப்பு ஹீரோவையே மிஞ்சும் விதமாக இருந்ததுடன் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளினார். இதைதொடர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான, ரசிகர்களின் வரவேற்பை பெரும் விதாமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஆதிக் ரவிவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் எஸ்ஜே.சூர்யா. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.