‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சந்தித்து பேசினார்கள். இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழக முதல்வரிடம் திரை உலகத்தை மீட்டெடுத்திட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வி.பி.எப். கட்டணம் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.