ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் கலியுகம். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ப்ரமோத் சுந்தர் கூறியதாவது : போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்றார்.