இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‛‛ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதிலுள்ள பெரிய திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது அது நடைபெற்றது. அதேபோல் இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் உள்ள மூன்று ஏரியாக்களை வாங்கியிருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம், சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.