தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இது எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். இதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. விஜய்யுடன் இணைந்ததை அடுத்து அஜித்துடன் பவித்ரா பட த்தில் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிக்க 31 பேர் ஆடிஷனுக்கு வந்து தேர்வாகவில்லை. 32 வது ஆளாக போன நான் தேர்வானேன். மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு காத்திருக்கிறேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.