சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி இப்படம் பேசுகிறது. விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களாமல் மட்டுமே நடப்பதில்லை. சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
டிக்டாக்கில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில பெண்கள் பேசுகிற விதமும், நடக்கும் செயலும் சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். மொபைல் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம்தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்புதான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.
நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி, மதகுருமார்களாக, சாமியார்களாக, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமை ஒரு நாள் செய்தியாக கடந்து விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.