பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பிரபாஸ் - பூஜா ஹக்டே காதலர்களாக நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தை வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்ததால் ஆர்ஆர்ஆர் படத்தைப் போலவே ராதே ஷ்யாம் படத்தையும் மாற்று தேதியில் வெளியிட போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனபோதிலும் அதுகுறித்த தகவலை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப் போவதாக தெரிவிக்கவில்லை. அதனால் திட்டமிட்டபடி அப்படம் திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராதே ஷ்யாம் பட இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், படம் தள்ளிப் போகும் என்ற முடிவுக்கு ரசிகர்களை உருவாக்கியது நேரங்கள் கடினமானவை இதயங்கள் பலவீனமானவை மனங்கள் குழப்பத்தில் உள்ளன. வாழ்க்கை நம்மை நோக்கி எரிந்தாலும் நமது நம்பிக்கைகள் எப்போதும் உயர்ந்தவை. பாதுகாப்பாக இருங்கள். உயர்வாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பதிவை பார்க்கையில் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறீர்களா? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, அப்படியான திட்டங்களை வைத்திருந்தால் அதை நேரடியாக தெரிவித்து இருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.
ஆனபோதிலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதா கிருஷ்ணகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை நம்பவில்லை. காரணம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அறிக்கைகளில் மாற்றிவிட்டார்கள். அதனால் ஜனவரி 14ஆம் தேதி ராதே ஷ்யாம் படம் வெளி வர வாய்ப்பில்லை என்பதே பிரபாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.