'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஓடிடியில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியானது, ஓடிடியில் 13 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் நடைபெறும். இதற்கான பணியை பிக்பாஸ் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
மினி பிக்பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னர்களை தவிர அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்களிலிருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தற்போதைய தகவலிலின் படி அனிதா சம்பத், ஜுலி, வனிதா விஜயக்குமார், சினேகன் உள்ளிட்டோர் லிஸ்டில் உள்ளனர். இந்த பிக்பாஸ் ஓடிடி வெர்சன் ஜனவரி இறுதியிலிருந்து 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளாராம். எனவே, இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு தளங்களில் ஒளிபரப்பாகுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.