ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆர்ஆர்ஆர் என்கிற பிரமாண்டமான படம் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளை எல்லாம் களைகட்டும் விதமாக நடத்தி ரிலீஸுக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி என்கிற அரசின் நிபந்தனையால் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் இல்லை என அறிவித்து விட்டார்கள்.. இந்தப்படத்தின் திடீர் விலகலால், தமிழில் ஜன-26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜன-14ஆம் தேதிக்கு தங்களது ரிலீஸை மாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிப்போவதால், அதை சாதகமாக்கி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள '1945' என்கிற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் மடை திறந்து என்கிற பெயரில் உருவானது
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தப்படம் கிடப்பில் கிடந்தது. இந்தநிலையில் தெலுங்கில் '1945' என்கிற பெயரில் வெளியாகிறது.